அனுபவங்கள்...

ஒவ்வொரு செயலும் ஒரு புதிய அனுபவமே...

Name:
Location: Munich, Bayern, Germany

Saturday, October 18, 2008

இவருக்கு கால் கொஞ்சம் நீளம்...



பதிவு போட்டு ரெம்ப நாள்ளாச்சு, இன்னிக்கு காலைல வீட்ல இந்த கேரட்டை எடுத்து காண்பிச்சாங்க. அப்படியே கண், மூக்கு, வாய் வச்சு ஒரு புகைப்படம் எடுத்துட்டேன். சரி இதுவே இன்னொரு ஆரம்ப்பமா இருக்கட்டும்னு ஒரு பதிவா போட்டுட்டேன். இதுலாம் ஒரு பதிவானு திட்டாதிங்க. இந்த கேரட்டை வெட்டினாலோ உடச்சாலோ ரெட்டை பிள்ளை பிறக்கும்னு பயமுறுத்துறாங்க. என்ன பண்ணலாம்னு நீங்களே சொல்லுங்க.

அன்புடன்,
மனசு...

Labels:

Sunday, January 27, 2008

வார புத்தகங்கள்...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்ப்பாடா... ஒரு வழியா ரெம்ப நாளைக்கு அப்புறமா பதிவு போடலாம்னு நினச்சு உக்காந்து எழுதிட்டு இருக்கேன். தாமதத்துக்கு காரணம் ஊருவிட்டு ஊரு மாறி வேலைவிட்டு வேலைமாறினதுதான்... கிட்டதட்ட ஒரு ஆறு ஏழு மாசத்துக்கு அப்புறமா போடுற பதிவு உருப்படியா போடனும்னு நினச்சேன் அதோட விளைவுதான் இதில இருக்குற கருத்துக்கள். இதில யாரையும் புண்பத்துற நோக்கம் எனக்கு இல்லை. நாட்ல நடக்குற அவலங்களை சொல்லனும்னு ஒரு ஆதங்கம் அவ்வளவுதான்.

இன்னிக்கு காலைல வாரா வாரம் அந்த மலர் புத்தகத்தை என் மனைவி உக்காந்து படிச்சுட்டு இருந்தாங்க. இணையத்திலயே வர புத்தகம், வாரா வாரம் படிச்சுட்டுதான் மறுவேலை பார்ப்பாங்க... அந்த புத்தகத்தில ஒரு பிரபலமான பெண் எழுத்தாளர் வாசகர் பிரச்சனைகளுக்கு பதில் சொல்ற பகுதி... ஆனா எனக்கு என்னவோ எப்பவுமே அதுல உடன் பாடு இல்லை... ஏதோ ஒரு வருக்கு இருக்கும் பிரச்சனைக்கு பதில் சொல்றவங்க அவங்களுக்கே நேரடியா எழுதலாமேனுதான் சொல்லுவேன். என் மனைவியின் வாதம் இதே மாதிரி பிரச்சனை வேற யாருக்கும் இருந்தாலும் அவங்களுக்கு உபயோகப்படும்னு அவங்க வாதம்.

ஆனா வர வர அந்த புத்தகங்களில் வரும் விசயங்கள் ஏதோ வியாபாரத்தனமா படுது. இந்தவாரம் வந்த விசயம் ரெம்ப கண்றாவி. நிஜமாவே இங்க எழுத முடியாத விசயம். எனக்கென்னவோ அவங்களே அந்த மாதிரி கதைகளை திரிச்சு எழுதுறாங்களோனு தோனுது. என்னோட கருத்து என்னனா, நிஜமாகவே கருத்து சொல்ல விரும்புறவங்க சம்பந்தப்பட்ட நபருக்கு மட்டும் எழுதலாமே... குறைந்த பட்சம் இந்த வாரம் வந்த கண்றாவி விசயத்தை தவிர்க்கலாம். இந்த மாதிரி விசயங்கள் சமூகத்தில் எதிர்மறையான விசயங்களைத்தான் உண்டுபண்ணும்.

பத்திரிக்கைகள் சமூக அக்கறையோடு இருக்கனும், சும்மா பத்திரிக்கை விற்கிறேன் பேர்வழினு ஏதோ கதையெழுதி விக்காம இருந்தா சரி...

இது என்னோட கருத்து... உங்க கருத்தையும் பதிவு பண்ணுங்க....

அன்புடன்,
மனசு...

Saturday, June 23, 2007

விவசாயி... விவசாயி...


இந்தியா ஒரு விவசாய நாடு அப்படினு ஆரம்பப்பள்ளிக்கூடத்தில படிச்சது இன்னமும் ஞாபகம் இருக்கு. இதோட அர்த்தம் இந்தியாவில விவசாயம்தான் பெரிய தொழில் அப்படினும் சொல்வாங்க. இன்னிக்கு நிலைமை வேறதான் அப்படினாலும், விவசாயம் இல்லைனா ஒரு நாடு சுடுகாடு ஆகிடும். இன்னிக்கு நிலமைல விவசாயிங்க நிலம படுமோசம். ஒன்னு அவங்களால பயனடையறவங்க பெரிய அளவில வியாபாரம் பண்றவங்களோ அல்லது அவங்கள சுரண்டி சாப்பிடுறவங்களாவோ இருக்காங்க அப்படிங்கறதுததான் வேதனை. மொத்தத்தில அவங்களோட உழைப்பப உறிஞ்சுற அட்டைகளாதான் எல்லாருமே இருக்காங்க.

இங்க வாரா வாரம் விவசாயிகள் அவங்க அவங்க தோட்டத்தில விளையிற பொருள்கள கொண்டுவந்து வியாபாரம் பண்ணுவாங்க. நம்ம ஊருல மாதிரி சில்லறை கடைகள்ல கிடைக்கிறத விட இங்க விலை குறைவா இருக்காது. இங்க விலை அதிகம். அவங்க உழைப்புக்கேற்ற ஊதியம். அதேமாதிரி நம்ம ஊருமாதிரி பேரம் பேசுறது எல்லாம் கிடையாது. பொருளுக்கான விலை எழுதிருப்பாங்க. எவ்வளவு வேணுமோ வாங்கிக்கலாம். அவ்வளவுதான்.

இதே நம்ம ஊரு மார்க்கெட்டுனா, அவன் ஏண்டா வியாபாரம் பாக்க வந்தோம்னு நினைக்கிற அளவுக்கு விலை கேப்பாங்க. அதவிட தெருவில கொண்டுவரவங்ககிட்ட ஒரு விலை கேப்பாங்க பாருங்க அடடா... விலை கேக்குறா அழகே அழகு. அவங்க ஒரு விலை சொல்லி அதுல ஒரு 50 பைசாவாவது குறைச்சு வாங்கலைனா குழம்புல அந்த காய் வேகவே வேகாது.

அப்படி ஒரு நினைப்பு நம்ம மக்களுக்கு. ஆக மொத்தம் நம்ம ஊரு விவசாயி, வேகாத வெயிலில வேர்வை சிந்தி உழைக்கிறதோட மிச்சம் அவனோட வருமை மட்டுமே. அதுக்கு மேல என்ன இருக்கு அவங்ககிட்ட....

இதப்படிக்கிறவங்களாவது இனிமேல் மார்கெட் பக்கம் போனா விவசாயி சொல்றவிலை குடுத்து வாங்க முடியுமானு பாருங்க. தயவுசெய்து பேரம் பேசாதிங்க... நீங்க குடுக்கிறது அவங்க உழைப்புக்கான கூலி அவ்வளவுதான்.
விவசாயினு மட்டுமில்ல நிறைய இடங்கள்ல அப்படிதான். ஒவ்வொருத்தருக்- கும் நாம ஒவ்வொரு தராசு வச்சுருக்கோம். இந்த நிலம மாறனும்.
என்னிக்கு நம்ம விவசாயிகளையும் மதிச்சு அவங்க உழைப்புக்கேற்ற ஊதியம் குடுக்க போறோமோ அப்போதான் இந்தியா வல்லரசு ஆகும். இல்லைனா இந்தியா ஏச்சுப் பிழைக்கிற வரிசைலதான் இருக்கும். உங்க உழைப்புக்கு உங்க அலுகலகத்தில பேரம் பேசினா என்ன ஆகும்... ???அப்படி நினச்சுப்பாருங்க.... இது என்னோட சின்ன வேண்டுகோள்...


அன்புடன்,

மனசு...

Friday, April 13, 2007

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

இணையத்தள நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்தவருடம் இனிய வருடமாக அமைய கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.

புத்தாண்டை இனிமையாக கொண்டாடுங்கள்.

அன்புடன்,
மனசு...

Wednesday, January 31, 2007

விரைவில் புதிய பதிவு...

நண்பர்களே.... தவிர்க்கமுடியாத காரணங்களால் பதிவுகள் போட இயலவில்லை. விரைவில் புதிய பதிவுடன் சந்திக்கிறேன்...

அன்புடன்,
மனசு...

Wednesday, November 15, 2006

அய்யா இங்க கொஞ்சம் கவனிங்க...!!!









நேத்து கூகுள் வீடியோஸ்ல இந்தியாவில விவசாயம் செய்யிறத பத்தி ஒரு 25 நிமிட படம் போட்டிருந்தாங்க. அத பாத்தேன்... அம்மாடியோவ், உடம்புல இருந்து உயிர் வரைக்கும் எல்லாம் நடுங்கி போச்சு... இவ்வளவு விசயம் நடந்தும் இன்னும் விவரம் புரியாம இருக்கோமேனு. செயற்கை வேதியல் உரத்தால வர பாதிப்ப பத்திதான் அந்த படம். வாழ்க்கைல மறக்க முடியாத 25 நிமிடங்களப்பா.... எல்லாம் நம்ம மேல்நாடுகள்ல இருந்தும் உள்நாட்டில தயாரிக்கற உரங்கள், பூச்சி கொல்லி மருந்துகள் தான். மேலை நாடுகள் எல்லாம் காலிபண்ணினா போதும் சாமினு நம்ம ஊர குப்ப கிடங்கு மாதிரி நினச்சுட்டு இங்க வந்து எல்லாத்தயும் கொட்டுறானுங்க... இங்க இருக்கிறவங்களும் விவரம் புரியாம வாங்கி எல்லாத்தயும் உபயோகிச்சதோட விளைவுகள்தான் அந்த வீடியோல இருக்க விசயம். வெக்கமே இல்லாம மேலை நாடுகள் இந்தமாதிரி பூச்சி கொல்லிகளை நம்ம ஊருல விக்கிறாங்க... இது போதாதுனு நிறைய மாத்திரைகள் கூட இப்படி விற்கறதுதான் வேதனையான விசயம்... இதே விசயத்த ஆவங்கள திங்க சொன்ன பண்ணுவானாங்கறதுதான் கேள்வி....?

சரி நாட்டுக்கு உருப்படியா ஒரு காரியம் செய்யலாமுன்னு, இத ஒரு ரிப்போர்ட்டா தயார் பண்ணி ஆந்த கூகுள் லிங்கயும் சேர்த்து "சுகாதார அமைச்சருக்கும்" , நாட்டின் "முதல் குடிமகனான ஜனாதிபதிக்கும்" தனித்தனியா மின்னஞ்சல் அனுப்பினேன். ஜனாதிபதியோட மின்னஞ்சல் எப்போவும் வேலை செய்யும். அதுல வர விசயத்த கூட இணையத் தளத்திலயும் போடுவாங்க.

ஆனா அமைச்சருக்கு அனுப்பினது போன வேகத்தில திரும்ப வந்திருச்சு. எல்லா அரசு விசயங்களும் இப்படித்தான் போல... அரசு இதை கவனிக்குமா...?
மாநிலமோ மத்தியோ எல்லாம் இப்படித்தானா...?

இத விட இன்னொரு கொடுமைய கொஞ்ச நாளைக்கு முன்னால பார்த்தேன். மதுரை மாநகராட்சியோட இணையத்தளத்துல அவங்களை தொடர்பு கொள்றதுக்கு யாகூ மின்னஞ்சல் முகவரிய குடுத்துருந்தாங்க. மாநிலத்திலேயே இரண்டாவது பெரிய மாநகராட்சினு பீத்திகிடறதோட நிலமையே இப்படியானு நொந்து போயிட்டேன். இதுதான் மின்னஞ்சல் முகவரி mducorp@yahoo.com

முதல் பக்கத்தில எல்லாம் பளபளனுதான் இருக்கு... ஒரு மாநகராட்சிக்காக ஒரு தனியான மின்னஞ்சல் கொடுக்க முடியாதா???? இதுதான் இன்னிக்கு நிலமை. அரசாங்கத்தில தம்பிகளுக்கு கொடுப்பதற்கு பணம் இருக்கு, இதுக்குதான் இல்லை. காலக்கொடுமை.

சரி.... விசயம் என்னனா....மேல இருக்கிற படங்கள்ல ஒன்னு எனக்கு தவறான மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிருக்கிங்கனு திரும்பி வந்த மின்னஞ்சல், இன்னொன்று சுகாதாரத்துறையின் இணையத்தளத்தில கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரி. இரண்டு படங்களையும் தெளிவா பாருங்க...

மின்னஞ்சல் முகவரி மாறும் பட்சத்தில் அதை மாற்றுவதற்கு கூடவா நேரமில்லை? அல்லது சுகாதார அமைச்சர் அந்த மின்னஞ்சலையே உபயோகப்படுத்துவதில்லையா???

உங்களுக்காக அந்த பக்கத்தை இங்கே தர்றேன்... இத்த நான் எங்க போயி சொல்றது மாமோய்ய்ய்ய்ய்ய்!!! யாராவது தெரிஞ்சா சொல்லுங்க.... நேரம் கிடச்சா இந்த கூகுள் வீடியோவயும் பாருங்க...

http://video.google.com/videoplay?docid=-6926416900837431282&q=india


அன்புடன்,
மனசு...

Tuesday, November 14, 2006

எங்கே போகிறோம்....?

காலை தந்தியில்...

சென்னையில் மழை,
ஆயிரம் கோடி ஊழல்,
அபலைப்பெண் கொலை,
சட்டசபை இன்று கூடுகிறது,
கணவனை கொன்றாள் மனைவி,

மாலை மலரில்...

சென்னையில் மழை நீடிக்கும்...
ஆயிரம் கோடியில் அமைச்சருக்கு பங்கு,
சட்டசபையில் அமளி.. எம்.எல்.ஏ சட்டை கிழிப்பு,
கள்ளக்காதலன் சிக்கினான் மனைவி வாக்குமூலம்,


காலையிலிருந்து மாலை வரை,
கேட்கக்கூடாத செய்திகள்...
செய்யக்கூடாத செயல்கள்...

மேற்கத்திய பாதிப்பு,
கைநிறைய சம்பளம்...

காலையில் டிப்பன்
பிட்சா பர்கர்...
தவித்தால் காபி டே, கோலா, பெப்சி..
மதிய உணவு சைனீஸ், இட்டாலியன்,
இரவுக்கு மது... மாது...

சனி ஞாயிறு வீக் எண்ட் ஹாலிடே..
வீட்டை விட்டு வெளியே பெண்களுடன் கும்மாளம்...
பெண்கள் ஆண்களுடன் அரட்டை...

அம்மா,அப்பா பாத்து ரெம்ப நாள் ஆச்சு...
அவங்க கூட உக்காந்து ஒழுங்கா பேசி
மாசக்கணக்காச்சு...
பாட்டி தாத்தா போயே போச்சு...

பெற்றோருக்கோ பையன் ரெம்ப பிசி...
காலைல போனா இரவு வரை வேலை...

பெற்றோர் சொல்வது பிள்ளைக்கு பிடிப்பதில்லை
பிள்ளையின் செய்கை பெற்றோருக்கு பிடிப்பதில்லை
என்னானு கேட்டா...
கலாச்சார வித்யாசமாம்...
கிழ போல்ட்டுகளுக்கு புரியாதாம்...

எல்லோரும் ஒருநாள் கிழவன் கிழவியாவோம்...
புரியாத முட்டாள்கள் வியாக்கியானம் பேசி திரியுதுகள்...

உடலின் தினவு வற்றிப்போனபின் தெரியும்
கலாச்சார முன்னேற்றமா..
இல்லை
கலவிச்சார முன்னேற்றமா என்பது...

மாற்றங்கள் தனிமனித முயற்ச்சி மட்டுமல்ல...
அது ஒரு
சமுதாயத்தின்
ஒட்டு மொத்த முயற்ச்சி..
அடுத்தவரை குற்றம் சொல்வதை நிறுத்தி
ஒவ்வொருவரும்
உள்ளே பார்க்க
ஆரம்பித்தால் வரும்
ஒரு
மறுமலர்ச்சி...!!!

அன்புடன்,
மனசு...